திருச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுகவினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம்!
திருச்சி வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்த்து திமுகவினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
திருச்சி : திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுகவினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தை நடத்தினர்.
தமிழக ஆளுநர் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆளுநர் பன்வாரிலால் செல்லும் மாவட்டங்களில் அவருக்கு தொடர்ந்து கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், அதுகுறித்து அதைப்பற்றி கவலைப்படாமல் ஆளுநர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருச்சி வந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இன்று காலை மலைக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினார்.
இதனையடுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்கு அவர் செல்லும் போது, திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த நேரு, அமைச்சர்கள் ஆதாயம் பெறுவதையே குறிக்கோளாக வைத்திருப்பதால், மாநில உரிமை பறிபோவது குறித்து எந்த வித கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
-
கடைசியில விஜய்க்கு இருந்த ஒரு வாய்ப்பும் போச்சா.. அடித்து ஆடிய ஸ்டாலின்! ஓடி வந்த காங்கிரஸ்! -
எகிறிய காங்கிரஸ்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த ஸ்டாலின்.. திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது எப்படி? -
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு! -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
டெல்லிக்கு பறக்கும் விஜயகாந்த் மச்சான்.. ஒரே கையெழுத்தில் மாறிய தலையெழுத்து! காங்கிரஸுக்கு கல்தா! -
MLA சீட்டு கேட்கும் திமுக MP! அறிவாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து வந்த நிர்வாகிகள்! நாமக்கல் பாலிடிக்ஸ் -
கைய குடுங்க..இனிமே நாம ப்ரண்ட்ஸ்! திமுக -காங்கிரஸ் கூட்டணி உறுதி! ராகுலிடம் ப.சி சொன்ன ஒத்த வார்த்தை -
ஜாக்பாட்! பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 எக்ஸ்ட்ரா.. ஊதியம் ரூ.2,500ஆக உயர்த்தி அரசாணை! -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
தென் மாவட்டங்கள் இலக்கு.. புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக.. என்ன நடந்தது? -
ஆர்பி உதயகுமாருக்கு செக்.. ஓபிஎஸ் நடத்தும் பிரம்மாண்ட இணைப்பு விழா.. திமுகவில் இணையும் 1 லட்சம் பேர் -
TVK Vijay: கருணாநிதியாலே முடியவில்லை.. திமுக தொடர்ந்து 2வது முறை ஆட்சி பிடித்த சரித்திரம் இல்லை.. விஜய் பேச்சு












Click it and Unblock the Notifications