சென்னையில் அரசு குடியிருப்பை, அசால்ட்டாக வாடகைக்கு விட்ட மத்திய அரசு ஊழியர்கள்.. சிபிஐ வழக்குப்பதிவு
சென்னை கேகே நகரில் மத்திய அரசு ஊழியர்கள் அரசுக்கு சொந்தமான குடியிருப்பை முறைகேடாக வெளியாட்களுக்கு வாடகைக்குவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை கேகே நகரில் மத்திய அரசு ஊழியர்கள் அரசுக்கு சொந்தமான குடியிருப்பை முறைகேடாக வெளியாட்களுக்கு வாடகைக்கு விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு நடத்திய சோதனையில் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. வீடு வாடகைக்கு கொடுத்த சம்பவத்தால் மத்திய அரசு ஊழியர்கள் 36 பேர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக மத்திய அரசு நிறுவனங்களின் வேலை பார்க்கும் நபர்களுக்கு மத்திய அரசின் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படுவது வழக்கம். அரசுக்கு சொந்தமான இந்த வீட்டை விற்பதோ, வாடகைக்கு விடுவதோ குற்றம் ஆகும். அதன்படி சென்னை கேகே நகரில் மத்திய பொதுப்பணி துறை ஊழியர்களுக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் பொதுப்பணி துறையில் வேலை பார்க்கும் நபர்களின் குடும்பங்கள் மட்டுமே வசிக்க முடியும்.

இந்த நிலையில் சென்னை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவில் இந்த குடியிருப்பு குறித்து ரகசியமான குற்றச்சாட்டு ஒன்று கொடுக்கப்பட்டது. அதன்படி இந்தக் குடியிருப்பில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அல்லாதவர்களும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. மேலும் நிறைய ஊழியர்கள் வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு இடத்தில் வசிப்பதாக அதில் கூறப்பட்டது.
இதையடுத்து சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு இது குறித்து அந்த குடியிருப்பில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் மொத்தம் 16 வீடுகளில் மத்திய அரசில் பணிபுரியாத நபர்களின் குடும்பங்கள் தங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அந்த முகவரியை வைத்து ஆதார், ரேஷன் போன்ற அரசு ஆவணங்களை வாங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வீடுகளை வாடகைக்கு விட்ட ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்பின் பராமரிப்பாளர் திருநாவுக்கரசு என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் வெவ்வேறு பிரிவு அதிகாரிகள் என மொத்தம் 36 பேர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications