கழுத்தில் கயிறு போட்டு நாயை தூக்கிய தாம்பரம் நகராட்சி ஊழியர்கள்... வைரலான வீடியோவால் வழக்கு!
சென்னைக்கு அருகே கல்லூரி வளாகத்தில் இருந்து நாய் ஒன்றை சுருக்குக் கயிறு போட்டு ஈவு இரக்கமற்ற முறையில் இழுத்துச் சென்ற தாம்பரம் நகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : நாய்களைத் துன்புறுத்திக் கொன்றதாக விஐடி பல்கலைக்கழகத்தின் மீதும், தாம்பரம் நகராட்சி மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கீழ்க்கோட்டையூர் பகுதியில் உள்ள விஐடி பல்கலைகழக வளாகத்திற்குள் இரண்டு பேர் நாய் ஒன்றினை கயிற்றால் கட்டி இழுத்துச் செல்லும் பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கருப்பு நிற நாய் ஒன்றை இரண்டு பேர் கயிறு கட்டி தரதரவென இழுத்து வருகின்றனர்.
உயிருக்கு பயந்து அந்த நாய் ஓலமிடுவதை கண்டுகொள்ளாமல் பிடி இழக்காமல், அந்த நாயை நகராட்சி ஊழியர்கள் இழுத்துச் செல்கின்றனர். காண்போரை கலங்க வைக்கும் இந்த வீடியோவை விலங்குகள் நல ஆர்வலரும் மத்திய அமைச்சருமான மேனகா காந்தியின் கவனத்திற்கு வந்துள்ளது.

ப்ளூ கிராஸ் அமைப்பு புகார்
இதனையடுத்து அவர் வேளச்சேரியில் உள்ள ப்ளூ கிராஸ் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து டாம் வில்லியம்ஸ், தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கொடுமைப்படுத்தி பிடித்து சென்றனர்
நகராட்சி ஊழியர்கள் சுந்தரம், தேவா ஆகியோர் நாயை சித்ரவதை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தாம்பரம் நகராட்சி எல்லைக்குட்படாத கீழ்க்கோட்டையூரில் அத்துமீறிச் சென்று விஐடி பல்கலைகழகத்தினுள் புகுந்து 11 நாய்களை துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி பிடித்து சென்றதும் தெரியவந்தது.

ஊழியர்களுக்கு அனுபவம் இல்லை
இதில் ஒரு நாய் பரிதாபமாக இறந்து போனதாக கூறப்படுகிறது. மேலும் பிடித்து சென்ற 10 நாய்களின் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை. விலங்குகளை பிடித்து செல்லும் முறை கூட ஊழியர்களுக்கு தெரியவில்லையே என்று இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கேள்விக்குறியாகும் விலங்குகள் பாதுகாப்பு
கடந்த ஆண்டு மாடியில் இருந்து கல்லூரி மாணவர்கள் நாயை தூக்கி வீசிக் கொன்ற சம்பவத்தையடுத்து விலங்குகள் மீதான கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில் நகராட்சி ஊழியர்களின் இந்த செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications