ஸ்டிரைக்கை கைவிடாத பஸ் ஊழியர்கள் மீது எஸ்மாவில் நடவடிக்கை... ஹைகோர்ட் உத்தரவு
போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில்குமாரய்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பேருந்துகளை இயக்குவோரை தடுப்பவர்கள் மீது எஸ்மா சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவ்வாறு திரும்பாதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை ஊடகங்களில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications