500, 1000 நோட்டுகள் ஒழிப்பு.. 2வது நாளாக சில்லறைக்காக அலையும் மக்கள்.. பால்கூட வாங்க முடியலை!
ரூ. 500 மற்றும் ரூ. 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் இரண்டாவது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ரூ. 500 மற்றும் ரூ. 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு பற்றிய மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், 2வது நாளாக பொதுமக்கள் சில்லரை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் வகையில், நேற்று முன்தினம் இரவு பழைய ரூ.500, ரூ.1,000, நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார்.
மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் நேற்று நாடு முழுவதும் பெரும் சில்லறைப் பிரச்சினை ஏற்பட்டது. ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை கடைக்காரர்கள் வாங்கிக் கொள்ள மறுத்ததால், அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் திணறினர்.

சில்லறைப் பிரச்சினை...
ரூ. 100 மற்றும் சில்லறையாக பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெரும்பாலான வணிகர்கள் பொருட்களை வினியோகித்தனர். இதனால் மற்றவர்கள் கையில் காசிருந்தும், பொருட்களை வாங்க வழியில்லாமல் அவதிப்பட்டனர்.

நோ சொன்ன ஹோட்டல்கள்...
ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைத்து இருந்தவர்களால் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடவும் முடியவில்லை. அங்கு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்துவிட்டதால், கையில் பணம் இருந்தும் பசியை தீர்க்க முடியவில்லை. தாகத்தை தணிக்க தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியாமல் மக்கள் திண்டாடினார்கள்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
ஷேர் ஆட்டோ, டவுன் பஸ் உள்ளிட்ட வாகனங்களிலும் சில்லறைப் பிரச்சினையால் மக்கள் பயணம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

2வது நாளாக...
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அந்த சில்லறைப் பிரச்சினை காலையிலேயே தொடங்கி விட்டதாக பலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். காரணம் நேற்று வங்கிகள் மற்றும் ஏடிஎம்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்களால் தங்கள் வசம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலவில்லை.

பால் கூட நோ...
எனவே, காலையிலேயே பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் சென்றவர்கள் சில்லறைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். டீக்கடை உள்ளிட்ட சிறு கடைகளிலும், ஹோட்டல்களிலும் சில்லறைத் தர மறுப்பதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மக்கள் கவலை...
இன்று வங்கிகள் செயல்படும் என்ற போதும், ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களின் கூட்டமும் அதிகமாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்றும் இந்த சில்லறைப் பிரச்சினை நீடிக்கும் வாய்ப்பிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications