காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சொல்வது என்ன? ஜஸ்ட் 16 பாயிண்ட்டுகளில் முழு விளக்கம்
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 16 பாயின்ட்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 16 பாயின்ட்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று முக்கிய தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு கர்நாடகாவுக்கு சாதகமாகவும் தமிழகத்துக்கு பாதகமாகவும் இருந்தது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதோ..

1 தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் தர கர்நாடகாவுக்கு உத்தரவு
2 பெங்களூரு குடிநீர் மற்றும் தொழிற்சாலைகைளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு
3 தமிழகம்- கர்நாடகா எல்லையிலுள்ள பிலிகுண்டுலு பகுதிக்கு ஆண்டுதோறும் கர்நாடகா 177.25 டிஎம்சி தண்ணீர் வருமளவுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும்.
4 எந்த மாநிலமும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.
5 தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டிஎம்சிக்கு கீழே செல்லும் போது தமிழகம் கூடுதலாக 10 டிஎம்சி கன அடி தண்ணீர் பெற சுப்ரீம்கோர்ட் அனுமதியளித்துள்ளது.
6 பெங்களூரு 4.2 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக பெறும். சுதந்திரத்திற்கு முந்தைய ஒப்பந்தம் செல்லுபடியாகும். பெங்களூரு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கர்நாடகா கூடுதல் நீரை பெறும்.
7 தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும் புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்படும்.
8 காவிரி நீர் பகிர்வு தொடர்பாக 1921ஆம் ஆண்டு ஒப்பந்தங்களை கர்நாடகா 1947 ஆம் ஆண்டில் அல்லது 1956 ஆம் ஆண்டில் செயல்படுத்ததால் தற்போது கேள்வி கேட்க முடியாது.
9 1921ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தம் 1971 ஆம் ஆண்டில் முடிவடைந்தது, இப்போது நீர் பகிர்வுக்கான அடிப்படையாக இருக்கமுடியாது.
10 ஆறுகள் நாட்டின் சொத்து. எந்த ஒரு தனி மாநிலமும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது.
11 பெங்களூரு காவிரி ஆற்றுக்கு வெளியே இருக்கிறது என்றும் 60% நிலத்தடி நீரை நம்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 கேரளாவுக்கு 30 டி.எம்.சி. காவிரி நீர் வழங்க தீர்ப்பாயத்தின் உத்தரவு தொடரும்
13 புதுச்சேரியின் புவிசார் நிலையை கருத்தில் கொண்ட இரண்டாவது பயிர் சாகுபடிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 43 ஆயிரம் ஏக்கர் பயிரிடலாம். இருப்பினும் தண்ணீர் ஒதுக்கீடு இல்லை.
14 கர்நாடகா குறு நிவாரணத்திற்கு உரிமை உள்ளது.
15 1924 ம் ஆண்டு மேட்டூர் அணை உடன்படிக்கை 1974 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. இப்போது நீர் ஒதுக்கீடு கொள்கை "சமமான ஒதுக்கீடு" அடிப்படையில்தான் ஆனால் முதன்மையானது அல்ல.
16 காவிரி நதி நீர் வழங்கல் தொடர்பான 1892 மற்றும் 1924 ஒப்பந்தங்கள் "அரசியல் ஏற்பாடுகள்" அல்ல ஆனால் பொது நலன்களை அடிப்படையாகக் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications