காவிரி: கோவையில் மத்திய அரசை கண்டித்து சிபிஎம் கட்சியினர் மறியல்-கைது
காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோவை காந்திபுரத்தில் நேற்று மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வரும் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து இந்த ஊர்வலமாக கிளம்பி வந்த அக்கட்சியினர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு பா.ஜ.க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துவதாகவும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும், வரைவு அறிக்கையினை உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications