சாக்லேட்டே தான் வேணும்: சென்னையில் 38 பேரை கடித்துக் குதறிய குரங்கு
சென்னை: தென் சென்னையில் சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு குரங்கு ஒன்று 25 குழந்தைகள் உள்பட 38 பேரை கடித்துள்ளது.
தென் சென்னையில் உள்ள செம்பாக்கம் பகுதியில் சிறுவன் ஒருவன் குரங்கிற்கு சாக்லேட் மற்றும் பிஸ்கேட் அளித்துள்ளான். அந்த குரங்கிற்கு சாக்லேட்டின் இனிப்பு சுவை மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து தினமும் அந்த பகுதிக்கு சாக்லேட் சாப்பிட வந்துள்ளது.

குழந்தைகளும் குரங்கு தானே என நினைத்து சாக்லேட் அளித்து வந்துள்ளனர். தினமும் சாக்லேட் சாப்பிட்டு சாப்பிட்டு அதற்கு வேறு எந்த உணவும் பிடிக்காமல் போய்விட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பசியுடன் வந்த குரங்கு சாக்லேட் கிடைக்காமல் ஆத்திரம் அடைந்தது. மக்கள் அளித்த வாழைப்பழத்தை சாப்பிட மறுத்தது.
இதையடுத்து அந்த குரங்கு 25 குழந்தைகள் உள்பட 38 பேரை கடித்துக் குதறியது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தும் சாக்லேட்டிற்கு அடிமையான அந்த குரங்கை உடனடியாக பிடிக்க முடியவில்லை.
ஒரு வழியாக நான்கு நாட்கள் போராடி அந்த குரங்கை பிடித்த அதிகாரிகள் அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications