ஆன்லைன் மோசடியில் சென்னை முதலிடம்... ஒரே ஆண்டில் ரூ. 16 கோடி மக்களிடம் இருந்து அபேஸ்
சென்னை: சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக சென்னைவாசிகளிடம் ஆன்லைன் மூலம் 16 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
வங்கி மோசடி, ஆன்லைன் மோசடிகளை தடுப்பது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேசிய மற்றும் தனியார் வங்கிகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். சைபர் குற்றங்கள் மூலம் பணம் கொள்ளையடிக்கப்படும் ஆபத்துகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேசுகையில் , " போலீசாருக்கு வரும் மோசடி புகார்களில் 70 சதவீத ஆன்லைன் மோசடிகள், வங்கிகள் தொடர்பானவை .
ஆன்லைன் மோசடிகள் நூதன முறையில் நடைபெறுகின்றன. அது தொடர்பாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் போதாது என்று தெரிவித்த அவர், பொதுமக்கள் பணத்தை பாதுகாக்க வங்கிகள் காவல்துறையோடு இணைந்து செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
ஆன்லைன் மோசடியில் சென்னை முதலிடம் வகிக்கிறது என்றும் ஒரே ஆண்டில் ரூ. 16 கோடியை வாடிக்கையாளர்கள் சென்னையில் இழந்துள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பின் தெரியாத எண்களில் இருந்து செல்போன்களுக்கு வரும் அழைப்புகளை ஏற்கவேண்டாம் என்றும், அந்த எண்களில் பேசும் நபர்களிடம் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை சொல்ல வேண்டாம் என்றும் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம்












Click it and Unblock the Notifications