சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிறது பயோ டாய்லெட்... சேலம் கோட்ட மேலாளர் தகவல்
கோவை: சென்னை-கோவை இடையே இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயோ டாய்லெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.
சேலம் கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை-கோவை இடையே இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர்காடு ரயிலில் கழிப்பறைகள் தூய்மைப்படுத்துவது மற்றும் சீரமைக்கும் பணி வரும் அக்டோபர் 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும். ரயிலில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக உள்ளது. எனவே, சேரன் எக்ஸ்பிரஸில் பயோ டாய்லெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் ரூ.7 கோடி கோவை ஜங்ஷன் நிலையத்தை மேம்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், அவற்றில் ரூ.6 கோடி நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கி(லிப்ட்) அமைப்பதற்கு செலவிடப்படுகிறது. ரூ.1 கோடி ரயில் நிலையத்தில் உள்ள மற்ற பணிகளுக்கு செலவிடப்படுகிறது. லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் புத்தாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும். மேலும் மேற்கூரைகள் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை ரயில் நிலைய பகுதிகள், ரயில் பெட்டிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தூய்மையாக வைத்திருக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நிலைய பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு பொதுமக்களின் உதவியும் அவசியம் என்று அவர் கூறினார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications