ரஜினி மீது போலீசில் புகார்.. தூத்துக்குடி போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாக குற்றச்சாட்டு
நடிகர் ரஜினி மீது ஓசூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒசூர்: தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒசூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் சென்றிருந்தார். பின்னர் செய்தியாளர்களையும் அங்கு சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் யாவும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி இருந்தது.

இந்நிலையில், ரஜினி பேசிய பேச்சினை கொலை மிரட்டலாக கருதி, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஒசூர் சென்னத்தூர் விஓசி நகரை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார்.
ஓசூர் டவுன் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஹேமாவதியிடம் அளித்துள்ள அந்த மனுவில், "நடிகர் ரஜினி, பொய்யான கருத்தை பரப்பி போராடினால் உயிர்பலி ஆகிவிடும் என எதிர்மறையாக தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் கொலை மிரட்டல் விடுத்து எச்சரிக்கை செய்துள்ளார்.
மேலும் போராட்டக்காரர்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டது என்று கூறி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என்பதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டு உள்ளார். அத்துடன், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசி இருக்கிறார்.
போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் எனக் கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்" எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி கலவரம் தொடர்பாக எதிர்மறையான கருத்தை தெரிவித்த நடிகர் ரஜினி மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
குற்றம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு.. தமிழகத்தை உலுக்கிய விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. டைம் லைன் -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications