ரசிகர்கள் விசில் பறக்க- 144 தடை நீக்கத்துக்குப் பின் படு 'மகிழ்ச்சி'யாக தூத்துக்குடிக்கு வந்த ரஜினி!
144 தடை நீக்கத்துக்குப் பின் படு மகிழ்ச்சியாக தூத்துக்குடிக்கு வந்தார் ரஜினி.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி 100 நாட்கள் போராட்டகளமாக இருந்தது... மே 22-ல் போர்க்களமாக இருந்தது.. அரசு அடக்குமுறையால் மயானபூமியாக மாறிப் போனது.. ஆனாலும் அரசியல் தலைவர்கள் வந்தார்கள் போனார்கள்.. வழக்கு போட்டார்கள்.. கைதானார்கள்.. சிறைக்கு போனார்கள்..
இவர்களைப் போல அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள துணிவில்லாமல் இப்போது 144 தடை உத்தரவு வாபஸ் பெற்ற பின்னர் 2 நாட்கள் சாவகாசமாக இருந்துவிட்டு தூத்துக்குடிக்கு சென்று திரும்பியிருக்கிறார் ரஜினிகாந்த். ஒரு துயரவு வீட்டுக்குப் போகிறோம் என்பதைப் போல ஒரு நிமிட ரஜினியின் நிகழ்வும் இல்லை.

உற்சாக கையசைப்பு
ரஜினிகாந்தின் ரசிகர்கள் விசில் பறக்க மருத்துவமனைக்கு வரவேற்கிறார்கள். ஏதோ தேர்தல் பிரசாரத்துக்கு வந்தவர் போல காரில் மேல் ஏறி நின்று ரசிகர்களுக்கு கை அசைக்கிறார்.

பல்லைக்காட்டி நலம் விசாரிப்பு
இதைவிட பெரிய கொடுமை.. மருத்துவமனையில் குண்டடிபட்டு குண்டாந்தடிகளால் குத்தி கிழிக்கப்பட்ட நிலையில் மரண படுக்கையில் படுத்து கிடப்போரிடம் முகம் முழுவதும் சிரிப்பை வெளிப்படுத்தியபடி நலம் விசாரித்ததுதான். இன்று இருக்கிறோம்.. நாளை உயிர் இருக்குமா? என தெரியாத நிலையில் மரண முகட்டில் போராடுகிறவர்களிடம் பல்லைக் காட்டிக் கொண்டு ரஜினிகாந்த் நலம் விசாரிப்பதாக சொன்னது அப்பட்டமான நாடகமாகத்தான் உணரப்பட்டது.

இழவு பூமியில் 'மகிழ்ச்சி'யா?
இதே மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்கள் வந்தார்கள்.. ஆட்சியர்கள் வந்தார்கள். ஆனால் அவர்கள் முகத்தில் ஒரு வித இறுக்கம், பரிவு, துயரம் இருந்தது. அரசுதான் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது.. அமைச்சர் பெருமக்கள் வந்து போனார்கள்.. ஆனால் இழவு பூமியில் புன்னகைக்க எவருக்குமே இல்லாத துணிவு ரஜினிகாந்துக்கு மட்டுமே இருக்கிறது.

அரசின் குரல்தானா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் வருகையும் அவரது நடவடிக்கையும் நிச்சயமாக விளம்பரத்துக்கான ஒன்றாகத்தான் தெரிந்ததே தவிர உள்ளார்ந்த ஒன்றாகவும் இல்லை. சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவினார்கள்; நீதிமன்றத்தின் மூலம்தான் தீர்வு காண வேண்டும் என அபத்தமாக பேசியது எல்லாமே 'அரசின்' குரலாகவே பார்க்கவும்படுகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications