இரு அணிகளும் ஒன்று பட வேண்டும்.. சிஆர் சரஸ்வதி விருப்பம்!
இரு அணிகளும் ஒன்று பட வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னை: இரு அணிகளும் ஒன்று பட வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார். எடப்பாடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் சிஆர் சரஸ்வதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதிமுக செய்திதொடர்பாளராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் சிஆர் சரஸ்வதி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் தீவிர ஆதரவாளர் ஆனார்.

மேலும் ஓபிஎஸ் சசிகலாவை எதிர்த்து தனி அணியாக செயல்பட தொடங்கியதால் அவரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளானார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, பொதுமக்கள் அவர் மீது தக்காளி உள்ளிட்டவற்றை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தினகரன் தரப்புக்கு ஏற்பட்ட தொடர் சறுக்கல்களால் தொலைக்காட்சிப் பக்கம் தலைக்காட்டாமல் இருந்தார் சிஆர். சரஸ்வதி. இந்நிலையில் சிஆர் சரஸ்வதி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது இரு அணிகளும் ஒன்று பட வேண்டும் என அவர் கூறினார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். இரு அணிகளும் ஒன்றிணைந்து கட்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளரான சி.ஆர். சரஸ்வதி வேண்டுகோள் விடுத்தார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications