தொடரும் துயரம்.. பயிர்கள் கருகியதால் விவசாயி தீக்குளித்து தற்கொலை.. திருச்சியில் சோகம்
கிணற்று நீரும் வற்றி பயிர்கள் கருகியதால் சோமரசம் பேட்டை அருகில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் திருச்சியில் சோகம் நிலவி வருகிறது.
திருச்சி: பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது. திருச்சி அருகில் இன்று விவசாயி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ளது அத்வத்தூர் கொய்யாத்தோப்பு கிராமம். இந்த கிராமத்தில் வாழ்ந்த விவசாயி கணேசன், காவிரி நீர் இல்லை என்றாலும் கிணற்று நீரை நம்பி தனது நிலத்தில் விவசாயம் செய்துள்ளார்.

இந்நிலையில், கிணற்றிலும் நீர் வற்றி காய்ந்துவிட்டது. இதனால் பயிர்கள் நீரின்றி கருகியது. இதனால் மனம் உடைந்து கணேசன் காணப்பட்டார். விவசாயம் பொய்த்துப் போன நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த கணேசன், மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி கணேசன் தற்கொலை குறித்து சோமரசம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்ந்து வருகிறது. 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். இதனை தடுக்கவும் உரிய முறையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications