தனிக்கட்சி தொடங்கி தினகரன் போட்டியிடுகிறார்.. உறுதி செய்த தங்க தமிழ்செல்வன்
தினகரன் கட்சி தொடங்கி பொது சின்னம் பெற்று வரவிருக்கும் தேர்தல்களில் அமோக வெற்றி பெறுவார் என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்
Recommended Video

திருப்பரங்குன்றம்: தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய தங்க தமிழ்செல்வன் தினகரன் கட்சி தொடங்கி பொது சின்னம் பெற்று வருவிருக்கும் தேர்தல்களில் அமோக வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் டி.டி.வி.தினகரன் அணியின் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக டி.டி.வி.தினகரன் அணியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டார்.

பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், ஜெயலலிதா இருந்த போதும், அதற்கு பின்பும் அ.தி.மு.க.வின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது பேசாமல் இருந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனக்கு முதல்மைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றதும், ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று குற்றஞ்சாட்டுகிறார்.
மேலும் பேசிய அவர், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வரும். அந்த எம்.எல்.ஏ க்களில் ஒருவர் முதல் அமைச்சராக வருவார் என்று தினகரன் கூறியதை சுட்டிக்காட்டினார். இது தினகரனின் பெருந்தன்மையை காட்டுவதாக கூறிய அவர், விரைவில் தினகரன் முதல் அமைச்சர் ஆவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விரைவில் தனிக்கட்சி தொடங்கி, பொது சின்னம் பெற்று 234 தொகுதியிலும் நாம் அமோகமாக வெற்றி பெறுவோம். அதன் பின் எங்கு பார்த்தாலும் நம்முடைய கட்சி, கொடி, சின்னம் தான் இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் கலந்துக்கொண்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications