அதிமுக ஆட்சியில் சிறைகளில் கூட பாதுகாப்பு இல்லை: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக ஆட்சியில் சிறைச்சாலைகள் கூட பாதுகாப்பற்ற இடங்களாக மாறிவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி பிரச்சினை கடுமையாக இருக்கும்போது அதுபற்றி எதுவும் கூறாமல், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றியுள்ளார். காவிரிப் பிரச்சினையில் கடும் வேதனைக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகளை அவர் மக்களாகவே கருதவில்லை போலும்.

அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவை பத்திரிகையாளர்கள் அணுகவே முடியவல்லை. அதேநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை எளிதல் அணுக முடிகிறது. 2011-ல் ஆட்சிக்கு வந்ததும் செவ்வாய்க்கிழமைதோறும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பேன் என்றார். ஜனநாயகம் பற்றிய கவலை இருந்தால் தானே அவருக்கு பத்திரிகைகளைப் பற்றிய கவலை வரும்.
அதிமுக ஆட்சியில் சிறைச்சாலைகள் கூட பாதுகாப்பற்ற இடங்களாக மாறிவருகிறது. வேலூர் சிறையில் பேரறிவாளன் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளார். இது நடந்து ஒரு வாரத்துக்குள் சென்னை புழல் சிறையில் ராம்குமார் மர்மான முறையில் இறந்துள்ளார். இதனை தற்கொலை என காவல்துறையும், கொலை என மற்றவர்களும் கூறுகின்றனர்.
கடந்த மாதத்தில் கடலூர் சிறையில் 2 கைதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பபட்டது. கோவை மத்திய சிறையில் செந்தில்குமார் என்ற கைதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், இதுபற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications