பலத்த மழை எதிரொலி.. ரேஷன் கடைகள் முன்பு திமுக நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

ரேஷன் கடைகள் முன்பு திமுக நடத்த இருந்த போராட்டம் பலத்த மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகள் முன்பு திமுக நடத்த இருந்த போராட்டம் பலத்த மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் விற்கப்படும் சர்க்கரை விலையை தமிழக அரசு அண்மையில் உயர்த்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

DMK protest has been postponed due to heavy rain

பல்வேறு அரசியல் கட்சிகளும் சர்க்கரை விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில் நவம்பர் 6ஆம் தேதியான வரும் திங்கட் கிழமை மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும் கனமழை பெய்து வருவதால் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+