இந்திரா, ராஜீவ் தபால் தலைகளை வெளியிடாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்... ஈ.வி.கே.எஸ். எச்சரிக்கை
கோவை : இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை மீண்டும் வெளியிடாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை நிறுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக வந்து ஆட்சி அமைப்பதே காங்கிரஸ் கட்சியின் திட்டமாகும். இருப்பினும், தேர்தல் நேரத்தில் மேலிட உத்தரவுப்படி முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் கூட்டணி என்றால் முழுமையான மது விலக்கு, ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. முதல் மேல் நிலைப்படிப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும் உள்ளிட்ட காங்கிரசின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்.
இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை வெளியிடாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications