தேர்தல் விதி மீறல்... பிரியாணி வழங்கிய அதிமுக, கட்சி அலுவலகம் திறந்த திருமா மீது வழக்கு
தூத்துக்குடி: கோவில்பட்டியில் அனுமதி பெறாமல் கட்சி அலுவலகம் திறந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட 6 பேர் மீது தேர்தல் பறக்கும் படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அனுமதியின்றி கட்சி அலுவலகம் திறந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து திருமாவளவன் உள்பட 6 பேர் மீது தேர்தல் நடத்தை விதியின் கீழ் தேர்தல் பறக்கும் படையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் மேலூர் மேலூர் ஊராட்சிக்கு உள்பட்ட உட்லாண்ட்ஸ் பகுதி மக்களுக்கு திங்கள்கிழமை அதிமுகவினர் பிரியாணி பொட்டலம் வழங்கியதாக புகார் கூறப்பட்டது.
இது குறித்து திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சியினர், குன்னூர் தேர்தல் அதிகாரிகளுக்குத் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள், விசாரணை நடத்தினர்.
அப்போது தேர்தல் விதிகளை மீறி பொதுமக்களுக்கு பிரியாணி பொட்டலம் வழங்கியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் உட்லாண்ட்ஸ் அதிமுக கிளைச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது கொலக்கம்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
“ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்த கூடாது..” ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி! -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
அதிமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் காளியம்மாள்? 3 முறை போட்டியிட்டபோது என்ன ரிசல்ட்? -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அடிச்சு ஓட விட்ருவோம் பாரு! அதிமுகவுக்கு ஜம்ப் ஆன காளியம்மாள் யார்? மீனவ பெண்ணின் "வேங்கை மகன்" மூவ் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி?












Click it and Unblock the Notifications