தேர்தல் விதி மீறல்... பிரியாணி வழங்கிய அதிமுக, கட்சி அலுவலகம் திறந்த திருமா மீது வழக்கு
தூத்துக்குடி: கோவில்பட்டியில் அனுமதி பெறாமல் கட்சி அலுவலகம் திறந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட 6 பேர் மீது தேர்தல் பறக்கும் படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அனுமதியின்றி கட்சி அலுவலகம் திறந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து திருமாவளவன் உள்பட 6 பேர் மீது தேர்தல் நடத்தை விதியின் கீழ் தேர்தல் பறக்கும் படையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் மேலூர் மேலூர் ஊராட்சிக்கு உள்பட்ட உட்லாண்ட்ஸ் பகுதி மக்களுக்கு திங்கள்கிழமை அதிமுகவினர் பிரியாணி பொட்டலம் வழங்கியதாக புகார் கூறப்பட்டது.
இது குறித்து திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சியினர், குன்னூர் தேர்தல் அதிகாரிகளுக்குத் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள், விசாரணை நடத்தினர்.
அப்போது தேர்தல் விதிகளை மீறி பொதுமக்களுக்கு பிரியாணி பொட்டலம் வழங்கியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் உட்லாண்ட்ஸ் அதிமுக கிளைச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது கொலக்கம்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications