லாபகரமான எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்பது ஏன்?.... டி.ஆர். பாலு கேள்வி
சென்னை: லாபகரமாக இயங்கி வரும் எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு துடிப்பது ஏன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
எண்ணூர் துறைமுகம், ஹிந்துஸ்தான் லைப்கேர், இந்தியா பார்மாகுட்டிகல்ஸ் உள்ளிட்ட 4 பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எண்ணூர் துறைமுகத்துக்கு மத்திய அரசு சார்பில் 68 பங்குகளும், துறைமுக பொருளாதார துறைக்கு 32 பங்குகளும் உள்ளன. மத்திய அரசிடம் உள்ள மொத்த பங்குகளையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூர்வாரும் கழகத்தில்
மேலும் இந்திய தூர்வாரும் கழகத்தில் 73.47 சதவீதம் பங்கு உள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.15,000 கோடி வருவாய் கிடைத்தது. ஏலம் விடுவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணாநிதி இடம் வழங்கினார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 1996-ஆம் ஆண்டு மின்சார வாரியம், பெருவளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து எண்ணூர் துறைமுகத்துக்கு இடம் வழங்கியது.

மிகப் பெரியதாகும்
பின்னர் கடந்த 2001- இல் வாஜ்பாயும், கருணாநிதியும் தொடக்க விழா நடத்தி வைத்தனர். அந்த இடத்தின் மதிப்பு மட்டும் ரூ.15,000 கோடியாகும். 12 மிகப் பெரிய பொது துறை நிறுவனங்களில் எண்ணூர் துறைமுகம் மிகப் பெரியதாகும்.

பணமுதலைகளுக்கு
கடந்த 6 ஆண்டுகளாக மிகவும் லாபகரமாக இயங்கி வரும் துறைமுகத்தை இப்படி அவசர அவசரமாக மத்திய அரசு விற்க துடிப்பது ஏன். மத்திய அரசுக்கு நெருக்கமான பண முதலைகளுக்கு வெள்ளித் தட்டில் வைத்து துறைமுகத்தை தாரை வார்க்க மத்திய அரசு விரும்புகிறது. தங்கள் தயவில் உள்ள அதிமுக அரசு எதையும் தட்டி கேட்காது என்று தைரியமா? என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications