லாபகரமான எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்பது ஏன்?.... டி.ஆர். பாலு கேள்வி
சென்னை: லாபகரமாக இயங்கி வரும் எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு துடிப்பது ஏன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
எண்ணூர் துறைமுகம், ஹிந்துஸ்தான் லைப்கேர், இந்தியா பார்மாகுட்டிகல்ஸ் உள்ளிட்ட 4 பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எண்ணூர் துறைமுகத்துக்கு மத்திய அரசு சார்பில் 68 பங்குகளும், துறைமுக பொருளாதார துறைக்கு 32 பங்குகளும் உள்ளன. மத்திய அரசிடம் உள்ள மொத்த பங்குகளையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூர்வாரும் கழகத்தில்
மேலும் இந்திய தூர்வாரும் கழகத்தில் 73.47 சதவீதம் பங்கு உள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.15,000 கோடி வருவாய் கிடைத்தது. ஏலம் விடுவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணாநிதி இடம் வழங்கினார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 1996-ஆம் ஆண்டு மின்சார வாரியம், பெருவளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து எண்ணூர் துறைமுகத்துக்கு இடம் வழங்கியது.

மிகப் பெரியதாகும்
பின்னர் கடந்த 2001- இல் வாஜ்பாயும், கருணாநிதியும் தொடக்க விழா நடத்தி வைத்தனர். அந்த இடத்தின் மதிப்பு மட்டும் ரூ.15,000 கோடியாகும். 12 மிகப் பெரிய பொது துறை நிறுவனங்களில் எண்ணூர் துறைமுகம் மிகப் பெரியதாகும்.

பணமுதலைகளுக்கு
கடந்த 6 ஆண்டுகளாக மிகவும் லாபகரமாக இயங்கி வரும் துறைமுகத்தை இப்படி அவசர அவசரமாக மத்திய அரசு விற்க துடிப்பது ஏன். மத்திய அரசுக்கு நெருக்கமான பண முதலைகளுக்கு வெள்ளித் தட்டில் வைத்து துறைமுகத்தை தாரை வார்க்க மத்திய அரசு விரும்புகிறது. தங்கள் தயவில் உள்ள அதிமுக அரசு எதையும் தட்டி கேட்காது என்று தைரியமா? என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications