8 நாள் ஊதியம் பிடித்தம்.. தலைமைச் செயலகம் முற்றுகை.. பிரிகால் ஆலை தொழிலாளர்கள் கைது
8 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதால் கோவை பிரிகால் ஆலைத் தொழிலாளர்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: கோவை பிரிகால் ஆலை ஊழியர்கள் திடீரென தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பிரிகால் ஆலை நிர்வாகம், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு 8 நாட்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளது. அதனை முறைப்படி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதனை நிர்வாகம் செய்ய மறுத்துவிட்டது.

இந்நிலையில், பிரிகால் ஆலை ஊழியர் சென்னை தலைமைச் செயலகம் முன் ஒன்று கூடினர். பின்னர், தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின் போது பிடிக்கப்பட்ட தங்களது 8 நாள் ஊதியத்தை பெற்றுத் தர வழி வகை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள், தலைமைச் செயலகத்தில் நுழைய முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். சட்டசபை நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் திடீரென முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications