ஃபெரா வழக்கு: பெங்களூர் சிறையிலிருந்து காணொலி காட்சியில் ஆஜரானார் சசிகலா- குற்றச்சாட்டு பதிவு
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா மீது மேலும் ஒரு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா மீது மேலும் ஒரு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் டிவி.க்கு உபகரணங்கள் வாங்கியதில் மோசடி எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றவியல் நீதிபதி ஜாகீர் உசேன் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 1996-97ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெஜெ டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியது தொடர்பாக அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன், ஜெஜெ டிவி மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்குகள் எழும்பூர் 1-வது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜாகிர் ஹுசைன் முன்பு நடந்து வருகிறது. 4 வழக்குகளிலும் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து காணொலி காட்சியில் சசிகலா கடந்த ஜூன் 21ஆம் தேதியன்று எழும்பூர் நீதிமன்றத்தில் 3-வது தளத்தில் உள்ள காணொலி காட்சி அறையில் அமைக்கப்பட்ட திரையில் சசிகலா ஆஜரானார்.
அப்போது, இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கரனும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார், வழக்கறிஞர் அய்யப்பன் ஆகியோரும், அமலாக்கத் துறை சார்பில் வழக்கறிஞர் ரமேஷும் ஆஜராகினர்.
உங்களுக்கு தமிழ் , ஆங்கிலம் இதில் எந்த மொழியில் கேள்விகள் கேட்கலாம் என்று சசிகலாவிடம் நீதிபதி ஜாகிர் ஹுசைன் கேட்டார். அதற்கு சசிகலா தமிழ் என்று பதிலளித்தார். அதையடுத்து சசிகலா, பாஸ்கரனிடம் ஜெஜெ டிவிக்கு உபகரணங்கள் மற்றும் அப்லிங்க் தொடர்பாக அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாகவும், வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்தது தொடர்பாகவும் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப் பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் இல்லை, எனக்குத் தெரியாது என்றே சசிகலா பதிலளித்தார்.
மீண்டும் ஜூலை 1ஆம் தேதி காணொலி மூலம் சசிகலா ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் பாஸ்கரனும் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜரானார். எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா மீது மேலும் ஒரு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications