மெரினாவில் உலகை திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு புரட்சி மையம் கொண்டது இதே நாளில்தான்!
உலகை திரும்பி பார்க்க வைத்த மெரினா ஜல்லிக்கட்டு புரட்சி மையம் கொண்டது இன்றுதான்!
சென்னை: தமிழர் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடைக்க அறவழியில் லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அணிதிரண்ட நாள்தான் இன்று.
சங்க இலக்கியங்கள் பேசும் ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்வு என்பது தமிழரின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று. தமிழர் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் விழாக்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும் ஒரு அங்கம்.
ஆனால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான காரணத்தை முன்வைத்து அன்னியர் அமைப்பான பீட்டா உச்சநீதிமன்றம் மூலம் தடை விதித்தது. இந்த தடையை உடைப்பதற்காக அலங்காநல்லூர் வாடிவாசலில் புரட்சி மையம் கொண்டது.

அலங்காநல்லூரில் தொடங்கி
அலங்காநல்லூரைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த புரட்சி மெல்ல மெல்ல விரிவடைந்தது. மதுரை, திருச்சி, கோவை, சேலம் என அத்தனை நகரங்களும் போர்க்கோலம் பூண்டன.

விடிய விடிய போராட்டம்
இதன் உச்சமாக சென்னை மெரினா கடற்கரையில் சில நூறு இளைஞர்கள் முதலில் ஒன்று திரண்டனர். பின்னர் மெல்ல மெல்ல இந்த எண்ணிக்கை பெருந்திரளானது. இரவிலும் அசையாமல் மெரினா மணலிலேயே இளைஞர் பட்டாளம் திரண்டிருந்தது.

குடும்பம் குடும்பமாக
மாணவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த எழுச்சிமிக்க போராட்டம்தான் பல லட்சம் தமிழர்களை ஒரு வாரகாலம் மெரினா கடற்கரையில் அணி திரள வைத்தது. குடும்பம் குடும்பமாக ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடந்த புரட்சியில் கை கோர்த்தனர்.

அதிர்ந்தது உலகம்
துளி வன்முறையும் இல்லாமல் உரத்த முழக்கங்களுடன் மெரினாவில் அமைதி அறவழியில் லட்சக்கணக்கானோர் கொட்டும் உறை பனியிலும் குவிய உலகமே அதிர்ந்தது. இப்படியும் ஒரு புரட்சியை முன்னெடுக்க முடியுமா? என அரபு வசந்தங்களை பார்த்த தேசங்கள் அதிர்ந்தன.

மீட்டெடுத்த புரட்சி
இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் உலக நாடுகளில் மெரினா புரட்சிக்கு ஆதரவாக அறவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஒருவார காலம் மெரினாவில் நடந்த இந்த அறவழிப் புரட்சிதான் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு உரிமையை இந்த ஆண்டு நமக்கு மீட்டுக் கொடுத்தது.
ரெட் சல்யூட்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications