மெரினாவில் உலகை திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு புரட்சி மையம் கொண்டது இதே நாளில்தான்!
உலகை திரும்பி பார்க்க வைத்த மெரினா ஜல்லிக்கட்டு புரட்சி மையம் கொண்டது இன்றுதான்!
சென்னை: தமிழர் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடைக்க அறவழியில் லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அணிதிரண்ட நாள்தான் இன்று.
சங்க இலக்கியங்கள் பேசும் ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்வு என்பது தமிழரின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று. தமிழர் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் விழாக்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும் ஒரு அங்கம்.
ஆனால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான காரணத்தை முன்வைத்து அன்னியர் அமைப்பான பீட்டா உச்சநீதிமன்றம் மூலம் தடை விதித்தது. இந்த தடையை உடைப்பதற்காக அலங்காநல்லூர் வாடிவாசலில் புரட்சி மையம் கொண்டது.

அலங்காநல்லூரில் தொடங்கி
அலங்காநல்லூரைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த புரட்சி மெல்ல மெல்ல விரிவடைந்தது. மதுரை, திருச்சி, கோவை, சேலம் என அத்தனை நகரங்களும் போர்க்கோலம் பூண்டன.

விடிய விடிய போராட்டம்
இதன் உச்சமாக சென்னை மெரினா கடற்கரையில் சில நூறு இளைஞர்கள் முதலில் ஒன்று திரண்டனர். பின்னர் மெல்ல மெல்ல இந்த எண்ணிக்கை பெருந்திரளானது. இரவிலும் அசையாமல் மெரினா மணலிலேயே இளைஞர் பட்டாளம் திரண்டிருந்தது.

குடும்பம் குடும்பமாக
மாணவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த எழுச்சிமிக்க போராட்டம்தான் பல லட்சம் தமிழர்களை ஒரு வாரகாலம் மெரினா கடற்கரையில் அணி திரள வைத்தது. குடும்பம் குடும்பமாக ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடந்த புரட்சியில் கை கோர்த்தனர்.

அதிர்ந்தது உலகம்
துளி வன்முறையும் இல்லாமல் உரத்த முழக்கங்களுடன் மெரினாவில் அமைதி அறவழியில் லட்சக்கணக்கானோர் கொட்டும் உறை பனியிலும் குவிய உலகமே அதிர்ந்தது. இப்படியும் ஒரு புரட்சியை முன்னெடுக்க முடியுமா? என அரபு வசந்தங்களை பார்த்த தேசங்கள் அதிர்ந்தன.

மீட்டெடுத்த புரட்சி
இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் உலக நாடுகளில் மெரினா புரட்சிக்கு ஆதரவாக அறவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஒருவார காலம் மெரினாவில் நடந்த இந்த அறவழிப் புரட்சிதான் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு உரிமையை இந்த ஆண்டு நமக்கு மீட்டுக் கொடுத்தது.
ரெட் சல்யூட்!
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications