மணிக்கு 60 கி.மீ.வேகம் காற்று வீசும்.. தென்தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
Recommended Video

சென்னை: 60 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் தமிழக மீனவர்கள் இன்று தென்தமிழக கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தணியும் வெயில்
தமிழகத்தின் முக்கிய அருவிகளில் நீர் பெருக்கெடுத்து கொட்டுவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எனினும் சில மாவட்டங்களில் வெயில் கொளுத்தியும் வருகிறது. வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தெரிவித்தது.

கடலுக்கு செல்ல வேண்டாம்
இதையடுத்து, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தணிந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். என்றாலும், திருச்சி, தூத்துக்குடி போன்ற ஒரு சிலமாவட்டங்களில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில், தென்தமிழக பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாம்
அதாவது குறைந்தபட்சம் 35 முதல் 45 கி.மீ வேகத்தில் இந்த பலத்த காற்றானது வீசக்கூடும் என்றும், அதிகபட்சமாக 60 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. ஆகையினால் பாதுகாப்பு கருதி, மீனவர்கள் யாரும் தென்தமிழக கடல் பகுதிக்கு இன்று முழுவதும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் அறிவுறுத்தியும் உள்ளது.

கொந்தளிப்புடன் கடல்
குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடற்பகுதியில் 3 முதல் 3.5 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் உயருவதுடன், கடலும் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதற்கேற்றார்போல் கடந்த இரு தினங்களாகவே காற்று பலமாக வீசிவருகிறது. கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications