பசுமை நிறைந்த நினைவுகளுடன்.. பாடித் திரிந்து விட்டு பறந்தோடிய வேடந்தாங்கல் பறவைகளே!
சென்னை: சீசன் முடிந்த காரணத்தால் வேடந்தாங்கலுக்கு இனப்பெருக்கத்துக்காக வந்த பறவைகள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிட்டன. இதையடுத்து, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வரும் 27-ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதாக தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பழமையான சரணாலயங்களில் வேடந்தாங்கலும் ஒன்று. இது சென்னையில் இருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் உள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான மைல்களை தாண்டி வந்து, குறிப்பிட்ட காலம் வரை இருந்து, தனது வம்சத்தைப் பெருக்க, முட்டையிட்டு குஞ்சு பொரித்து, சீசனை அனுபவிக்க வந்த வெளிநாட்டு விருந்தாளிகளாய், பறவைகள் இங்கு வந்து செல்வதுண்டு.

வெளிநாட்டுப் பறவைகள்...
ஆண்டுதோறும் சிங்கப்பூர், வங்காளதேசம், மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்து வக்கா, நாரை, மஞ்சள் நாரை, முக்குளிப்பான், கிவி, நாமகோழி, சாம்பல் கூழைக்கடா, நத்திக்கொத்தி நாரை, கூழைகடா, பாம்புதாரா, ஊசிவால்வாத்து, கரண்டிவாயன், வெள்ளைநிற அரிவாள்மூக்கன், வர்ணநாரை, நீர்காகம் போன்ற பல்வகை பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து செல்கின்றன.

சீசன்...
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளுக்கான சீசன் தொடங்குவதுண்டு. வேடந்தாங்கல் ஏரியில் உள்ள கடம்ப, கருவேல மரங்களில், இப்பறவைகள் கூடு கட்டி, தங்கி செல்லும்.

ஜனவரி...
பின்னர் அவை ஏப்ரல், மே மாதங்களில் மீண்டும் தங்களது ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும். அதிகபட்ச அளவாக 40,000 முதல் 50,000 வரையிலான பறவைகளை ஜனவரி மாதத்தில் வேடந்தாங்கலில் காண முடியும்.

முடிந்தது சீசன்...
இந்நிலையில், தற்போது அங்கு சீசன் முடிந்த காரணத்தால் இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பறவைகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளன. இதையடுத்து, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வரும் 27-ஆம் தேதி முதல் மூடப்படுவதாக தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பராமரிப்பு பணிகள்...
இந்தாண்டிற்கான சீசன் மீண்டும் மழை பெய்த பின் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்கும். அதுவரை சரணாலயத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications