வெளிநாட்டு பண விவகாரம்: உதயகுமார் மீது அரசு இறுகும் பிடி

கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியோடு அணு உலைகளை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் பலர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களை வழி நடத்திச் செல்வது அணு உலை எதிர்ப்பு பேராட்டக் குழு தலைவர் சுப. உதயகுமார் தான்.
உதயகுமாருக்கு ஒஹாயோ பல்கலைக்கழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்க டாலர்கள் அனுப்பபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. மேலும், இரண்டு வங்கி கணக்குகளில் மட்டும் சுமார் 44 ஆயிரம் டாலர்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் இதை உதயகுமார் மறுத்துள்ளார்.
மேலும், இது பல்கலைக்கழகம் தன்னை ஒரு துறையில் ஆராய்ச்சி வல்லுனராக சேர்த்து தான் கட்டுரைகள் அனுப்பியதற்காக கிடைத்த சன்மானமே என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் அரசியல் ரீதியாக உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியில் உள்ளதாலும், தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர் பெரும் நிதி பெற்றுள்ளார் என்றும் அரசு தரப்பில் ஆதாரங்களோடு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உதயகுமாரின் அன்றாட நிகழ்வுகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் உளவுத்துறை கண்காணித்து வருகின்றதாம். எனவே, விரைவில் உதயகுமார் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை பாயலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
உதயகுமாரை போலீசார் கைது செய்தால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கலவரம் வெடிக்கும் என அவரது ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications