For Daily Alerts
Just In
காதல் தகராறில் பயங்கரம் – கொதிக்கும் பாலை ஊற்றியதால் நான்கு பேர் காயம்!
பெரம்பூர்: பெரம்பூரில் ஏற்பட்ட காதல் தகராறில் கொதிக்கும் பாலை ஊற்றியதால் உடல் வெந்து நான்கு பேர் காயமடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூளையை அடுத்த தட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்கும் ஏற்கனவே காதல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்த தகராறில் கணேசன், அவரது அண்ணன் மாரிமுத்து ஆகியோரை கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் பாலு, தீபக்குமார், குமார், மணி ஆகியோர் தாக்கினர்.
இதனால் ஆவேசம் அடைந்த கணேசன் அருகில் உள்ள டீக்கடையில் இருந்த கொதிக்கும் பாலை கார்த்திக் தரப்பினர் மீது ஊற்றினார்.
இதில் பாலு, தீபக்குமார், குமார், மணி ஆகியோர் உடல் வெந்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
English summary
A youth in Chennai Perambur attacked four persons with boiling milk and injured them.
Story first published: Tuesday, August 12, 2014, 17:03 [IST]