சென்னையில் 15 பேரிடம் பூணூல் அறுப்பு..திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த நால்வர் போலீசில் சரண்
சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் சுமார் 15 பேர் பூணூல் அறுக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நால்வர் போலீசில் சரணடைந்துள்ளனர்.
பைக்கில் வந்த சில மர்ம நபர்கள், குறிப்பிட்ட சமுதாய ஆண்களை வழிமறித்து அவர்கள் அணிந்திருந்த பூணூல் கயிற்றை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
பூணூல் அறுத்து பைக்கில் தப்பியோர் உருவங்கள் திருவல்லிக்கேணியில் ஆங்காங்கே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

திருவல்லிக்கேணி பகுதி
மொத்தம் 8 பேர் இன்று காலை பைக்குகளில் வந்து ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 பேர் அணிந்திருந்த பூணூல்களை அறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நால்வர் சரண்
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், 4 பேர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். விசாரணையில் அவர்கள் திராவிடர் விடுதலை கழகம் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

திராவிடர் விடுதலை கழகம்
திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ராவணன், உமாபதி, ராஜேஷ், பிரபாகர் ஆகியோர் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அனைவருமே, கருப்பு சட்டை அணிந்தபடியும், பெரியார் படத்துடனான டி ஷர்ட் அணிந்து வந்து சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் தகவல்
பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் முகநூல் பக்கத்தில் நேற்று கருத்து வெளியிடப்பட்டது. அதை இன்று அவர் மறுத்தாலும், நேற்று இரவு திருப்பத்தூரில் பாஜக நிர்வாகியால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக பூணூல்களை அறுத்ததாக சரணடைந்த நால்வரும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications