பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!
Recommended Video

சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை திரும்புகிறார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, என இரண்டாக உடைந்த அ.தி.மு.க., கடந்த மாதம் 21ம் தேதி ஒன்றாக இணைந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.
இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக குறைந்தது. எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தொடங்கின.

ஆளுநருக்கு மனு
மேலும், கடந்த மாதம் 27ம் தேதி, சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். ஆனால் ஆளுநர் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

ஆளுநருக்கு ஸ்டாலின் கெடு
இந்த நிலையில் கடந்த 10ம் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், ஒரு வார காலத்திற்குள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்தார்.

மும்பை கிளம்பினார்
வித்யாசாகர் ராவை மு.க.ஸ்டாலின் சந்தித்த மறுநாளே ஆளுநர் மும்பை புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் அதிருப்தியடைந்த ஸ்டாலின்.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்டளையிடுமாறு தமிழக ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும், என்று ஹைகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை
வழக்கின் விசாரணையை 20ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மேலும், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்தும் அவர் உத்தரவிட்டார். ஆட்சியை கவிழ்ப்பதற்கான வேலையில் தான் இறங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். இந்த நேரத்தில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பரபரப்பு
இந்த நிலையில் இன்று மும்பையிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று டெல்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் ஆகியோரை சந்தித்து ஆலோசனைகளை நடத்தினர். இதையடுத்து ஆளுநர் நாளை சென்னை திரும்புகிறார். சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால், பரபரப்பு நிலவுகிறது.
-
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications