கிண்டியில் கல்லால் தாக்கப்பட்ட பேராசிரியர் மரணம்.. மனநிலை பாதிக்கப்பட்டவரின் வெறிச் செயலால் பரிதாபம்
சென்னை கிண்டியில் மனநிலை பாதிக்கப்பட்டவர் கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த கோவை பேராசிரியர், சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கிண்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர், சாலையில் நடந்து சென்ற பேராசிரியர் மீது கல் எறிந்து தாக்கினார். அதில் படுகாயமடைந்த பேராசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று மரணமடைந்தார்.
கோவை மாவட்டம் தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஜா.சுரேந்தர்நாத் முல்லர். 70 வயதான இவர், கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்த நிலையில், முல்லர் கடந்த 24-ம் தேதி தனது சொந்த வேலை விஷயமாகச் சென்னை வந்தார். பின்னர், முல்லர் கிண்டியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினார்.
அதனையடுத்து, அன்று காலை முல்லர், தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்து சர்தார் பட்டேல் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வந்த கல் முல்லரின் தலைப் பகுதியை பயங்கரமாகத் தாக்கியுள்ளது.
அதில் பலத்த காயமடைந்த முல்லர், உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குச் சிகிச்சை பலனின்றி முல்லர் நேற்று மரணம் அடைந்தார். இந்தச் சம்பவம் குறித்துக் கிண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் முல்லர் மீது கல்லை எறிந்தது அந்த வீட்டில் வசிக்கும் விஜயராஜ் என்பதும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் நடந்து சென்றவர் மீது கல்லெறிந்து தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications