கள்ளக்காதல் படத்தை பெண்களே கொண்டாடுவதை பார்த்தால்.. இனி குடும்ப வாழ்க்கை அவ்வளவுதானா?
Recommended Video

சென்னை: சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லக்ஷ்மி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' என்ற யூ-ட்யூப் சேனலில் இந்த வெளியாகியுள்ளது. இது பெண் விடுதலை என்று சிலர் கருத்து கூறும்போதிலும், பலரும் இது பெண்களை மோசமாக சித்தரிப்பதாக கூறுகிறார்கள்.
பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் லட்சுமியிடம் பாரதியார் கவிதை சொல்லி ஒரு இளைஞன் ஈர்ப்பதும், அதையடுத்து அந்த இளைஞனுடன் உடலுறவு கொள்வதும் பெண்களை மோசமாக சித்தரிக்கும் செயல் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது.
அதேநேரம், கணவனிடம் அன்பு கிடைக்கவில்லை என்பதால் பெண் இப்பிட செல்வதாக காட்டுவதாகவும் சிலர் கூறுகிறார்கள். அதிலும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள பெண்கள் சிலர் இதை ஆதரித்து பதிவிட்டுள்ளனர்.
அரவணைப்பில்லை
இதுகுறித்து சபரிநிவாஸ் இளங்கோவன் என்பவர் பேஸ்புக்கில் கூறியதை பாருங்கள்: அதிகாலை எழுந்து,சமைத்து முடித்து,வீட்டு வேலைகளை முடித்து கணவனையும், குழந்தையையும் அனுப்பிவிட்டு, தானும் வேலைக்கு சென்று சோர்வடைந்து வந்து எவ்வித அன்பும் அரவணைப்புமின்றி இரவில் கணவனின் உடல் பசியை ஆற்றிவிட்டு, தன் உடல் பசியை ஆற்ற தன் கணவனால் இயலவில்லையே என்ற ஆற்றாமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் தனது கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு என்றும் தெரிந்ததும் மனதளவில் பாதிக்கப்படுகின்றாள் லெக்ஷ்மி. நிற்க..!

அரவணைப்பு
ஆதரவற்று நிற்கும் நிலையில் கூட தன் கணவன் தன்னை பற்றி கவலைகொள்ளாமல் அதிகாலை சமையலுக்கு என்ன செய்வது என? கேட்கும் அந்த கேள்வியில் மனமுடைந்து நிற்கையில் தனக்காகவே இருக்கும் ஒரு "முன் பின் நவீனத்துவ" கவிஞனின் அரவணைப்பு கிடைக்கின்றது.

குழந்தைக்கு அம்மா
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அவனுக்குள் இருந்த அமைதிப்படை அமாவாசையானவன் அல்வா ரூபத்தில் சிறிது உப்புமாவை சாப்பிடக்கொடுத்து பசியாற்றிவிட்டு, பாரதியார் பாடல்களை பாடி அவளை பரவசமடைய செய்து படுக்கைக்கு அழைக்கையில்... "உங்க சமையலும், பாரதியார் பாடலும் நல்லா இருந்துச்சி, ரொம்ப சந்தோஷமா இருந்தேன், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நான் வாழ வேண்டும் என்றால், வீட்டில் எனக்காக காத்திருக்கும் என் மகனின் அம்மாவாகவே நான் வீட்டுக்கு போக ஆசைப்படுகின்றேன், அதனால் கொஞ்சம் தள்ளி இருங்க" என கூறிவிட்டு அங்கிருந்து அவள் எழுந்து செல்லும்படி காட்சி வைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அந்த லெக்ஷ்மி கொண்டாடப்பட்டிருப்பாள்.

கணவனுக்கும், மனைவிக்கும் வித்தியாசம் இல்லை
அந்த கணவன் துப்பப்பட்டிருப்பான். ஆனால் இப்போது அந்த கணவனுக்கும், இந்த மனைவிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, இவர்களுக்கு பிறந்த பிள்ளை தான் பாவம். இது போன்ற புரட்சிப்படங்களை கொண்டாடும் இந்த சமூகத்தையும், பெண்களையும் பார்க்கையில் ஒன்று மட்டும் தெரிகின்றது, இனிவரும் காலங்களில் ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை வாழ்வது என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும். "என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா - பாரதியார்".
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications