வெடிவழிபாட்டுக்கு முட்டுக்கட்டை போடவே பட்டாசு வெடிக்க தடை?புதிய ஆங்கிளில் எதிர்க்கும் அர்ஜூன் சம்பத்
ராஜபாளையம்: இந்து சமய கலாசாரத்தின் ஒரு அங்கமான வெடிவழிபாட்டுக்கு முட்டுக் கட்டை போடும் வகையில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுகின்றன; இதனை திமுக அரசு எதிர்த்து போராட வேண்டியது கடமை என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
ராஜபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: ஆண்டாள் தாயார் குறித்து வைரமுத்து மிகவும் அவதூறாக ஒரு கருத்தை பரப்பினார் . இதற்காக தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நாங்கள் புகார் கொடுத்தோம் . வழக்கு, பதிவு செய்தோம் - குளத்தூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு அது ராஜபாளையம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை செய்து கடந்த வாரம் அந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

சனாதனப் பேச்சு
திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் சட்டம் ஒழுங்கு விஷயத்திலே கவனம் செலுத்தவில்லை. பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு என செய்து கொண்டே இருக்கிறது. இந்த விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக சனாதனம், விடுதலை சிறுத்தைகளை வைத்து சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.

சட்டம் ஒழுங்கு விவகாரம்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுகவினர் காவல் நிலையங்களுக்குள்ளேயே வந்து காவல்துறையை மிரட்டுகின்ற அராஜகங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வீட்டின் மீது குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

பிஎப்ஐ தடை
தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து ஆதரித்த வண்ணம் உள்ளனர். அந்த தடை செய்யப்பட்ட தேச இயக்கங்களை ஆதரித்து திண்டுக்கல் கொடைரோடு பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. ஆனால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழகத்தினுடைய வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருக்கின்ற அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அந்த இயக்கங்களை, அமைப்புகளைத் தடை செய்யாமல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாது.

வெடி வழிபாடும் பட்டாசு தடையும்
டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து இருக்கிறார்கள் . சுற்று சூழல் மாசு என்பதை காரணம் காட்டி இந்த தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள் - இந்த தடை உத்தரவை விலக்கிக் கொள்ள மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது திமுகவின் கடமை . பட்டாசு தொழிலை பாதுகாப்பது மத்திய அரசாங்கத்தினுடைய கடமையும் கூட. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது என்பது இந்து சமய சடங்குகளின் மீது விதித்திருக்கின்ற தடையாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். வெடி வழிபாடு என்பது நம்முடைய சமயத்திலே கலாச்சாரத்தில் பண்பாட்டில் ஒரு அங்கம் . எனவே இதை காப்பாற்றுவதற்கு இந்த தடையை நீக்குவதற்கும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications