சென்னை ஜார்ஜ் டவுன் ப்ராசர் பிரிஜ் ரோடு இனி டிஎன்பிஎஸ்சி சாலை!
சென்னையில் உள்ள பல சாலைகளின் பெயர்களை மாற்ற மாநகராட்சி சிறப்பு அதிகாரிகள் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
சென்னை: சென்னையில் உள்ள முக்கிய சாலைகளுக்கு புதிய பெயர் சூட்டப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஜார்ஜ் டவுன் ப்ராசர் பிரிஜ் ரோடு இனி டிஎன்பிஎஸ்சி சாலை என அழைக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடத்தப்படாததால் தற்போது சென்னை மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாமல் சிறப்பு அதிகாரி மூலம் செயல்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் சிறப்பு அதிகாரிகள் கவுன்சில் மூலம் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளுக்கு புதிய பெயர் சூட்டப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் முக்கிய சாலைகளில் உள்ள அரசு நிறுவனங்களின் பெயரை வைக்க சிறப்பு அதிகாரிகள் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்மூலம் சென்னை ஜார்ஜ் டவுண் ப்ராசர் பிரிஜ் ரோடு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சாலை அதாவது டிஎன்பிஎஸ்சி சாலை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அலுவலகம் அந்த சாலையில் செயல்படுவதால் அந்த சாலைக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் எழும்பூர் மாண்டியத் ரோடு, 'ரெட் கிராஸ் ரோடு' என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த சாலையில் செஞ்சிலுவை சங்கம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications