இரும்புத் தாது ஏற்றுமதி முறைகேடு: சேலம் காபி துாள் கம்பெனி உள்பட 19 இடங்களில் சிபிஐ ரெய்டு
சேலம்: இரும்புத் தாது ஏற்றுமதியில் நடந்த முறைகேடு குறித்து சேலம் உள்பட 19 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த 2009-2010ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலிகிரி துறைமுகத்தில் இருந்து ரூ.200 கோடி மதிப்புள்ள 21 லட்சம் டன் இரும்புத் தாது சட்டவிரோதமாக பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ 22 வழக்குகள் பதிவு செய்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், பெல்லாரி, ஹோஸ்பெட், சந்தூர், கோவா, சேலம், கொல்கத்தா, மும்பை, குர்காவ்ன் மற்றும் பெல்காம் ஆகிய 10 நகரங்களில் உள்ள 19 நிறுவனங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சிபிஐ அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 270 முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள தனியார் காபி தூள் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று சோதனை நடந்துள்ளது. மேலும் அந்நிறுவன உரிமையாளரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications