காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் 2-வது நாளாக ஐடி அதிகாரிகள் சோதனை
காளீஸ்வரி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் 2-ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை: காளீஸ்வரி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் 2-ஆவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான 54 இடங்களில், 250-க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் ஒரே நேரத்தில் நேற்று காலை முதல் வருமான வரி சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, விருதுநகர், உள்ளிட்ட 54 இடங்களில் சோதனை நடைபெற்றது. பல ஆண்டுகளாக முறையான வருமான வரி தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காளீஸ்வரி நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் 2வது நாளாக இன்றும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரை, திண்டுக்கல், பழனி, கோவை, புதுச்சேரி உட்பட 54 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.
தலா 10 பேர் வீதம் 540 அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். காளீஸ்வரி நிறுவனம் சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதற்கான தொழிற்சாலைகள், சென்னை, கோவை, காக்கிநாடா ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன. இந்த எண்ணெய் நிறுவனமானது கடந்த 5 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று காலை 6 மணி முதல் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 2வது நாளாக இன்றும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சுமார் ரூ.100 கோடிக்கும் மேலாக வரி ஏய்ப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications