கொடநாடு எஸ்டேட், தினகரன் ஜோதிடர் வீட்டில் 3வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு
தினகரனின் ஜோதிடர் வீட்டிலும் கொடநாடு எஸ்டேட்டிலும் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர்: கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரன் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஜோதிடர் சந்திரசேகரன், தங்கம், சொத்துக்கள் வாங்கி குவித்தது, பங்கு சந்தையில் முதலீடு செய்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு, கர்ஸன் எஸ்டேட்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி உள்ளிட்டோருக்கு சொந்தமானவை. இங்கு 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
புதன்கிழமையன்று உள்ளே நுழைந்ததும் ஊழியர்களின் மொபைல் போன்களை தங்கள் வசப்படுத்தினர். தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராவின் திசைகளை மாற்றியமைத்து, அதன் பின் எஸ்டேட் பங்களா மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஊழியர்கள் மற்றும் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே போல் புதுச்சேரி அம்பலத்தாடையார் வீதியில் உள்ள லட்சுமி நகைக்கடையில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது. லட்சுமி குழுமத்தின் கிளை நிறுவனங்கள், நட்சத்திர விடுதி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதேபோல போயஸ்கார்டனில் உள்ள பழைய ஜெயாடிவி அலுவலகத்திலும் மூன்றாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications