ஏற்காடு தொகுதியில் இன்று ஜெயலலிதா அனல் பறக்கும் பிரச்சாரம்
சேலம்: இடைத்தேர்தலையொட்டி முதல்வர் ஜெயலலிதா இன்று ஏற்காட்டில் பிரச்சாரம் செய்கிறார்.
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரோஜாவை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று பிரச்சாரம் செய்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு பகல் 11 மணிக்கு வருகிறார்.

சேலத்தில் இருந்து அவர் வேனில் மின்னாம்பள்ளி, வெள்ளாளகுண்டம் பிரிவு, வாழப்பாடி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, வலசையூர், அயோத்தியாப்பட்டணம், உடையாப்பட்டி ஆகிய 9 இடங்களில் சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்.
அதிமுகவின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்யும் அவர் மாலை 4 மணிக்கு சென்னைக்கு திரும்புகிறார். ஜெயலலிதாவின் வருகையையொட்டி ஏற்காடு தொகுயில் 500 போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஜெயலலிதா செல்லும் வழியில் அவரை சந்தித்து விவசாயிகள் யாரும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து பிரச்சனை செய்யலாம் என்று சந்தேகிக்ககப்படுகிறது. இதனால் சந்தேக்கித்திற்குரிய விவசாயிகளை உளவுத் துறை கண்காணித்து வருகிறது.
முன்னதாக ஜெயலலிதா செல்லும் இடங்களை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications