ஜெ.க்கு நோய் தொற்று குணமாகிவிட்டது.. அவர் விரும்பும்போது டிஸ்சார்ஜ்: அப்பல்லோ தலைவர் பேட்டி
ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று முழுமையாக குணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உடல் நலம் தேறிவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனாலும், ஜெயலலிதா டிஸ்சார்ஜ் எப்போது என்பதுதான் அனைவரது கேள்வியாகவும் இருந்தது.

இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த அப்பல்லோ தலைவர் பிரதாப் சி. ரெட்டியும், நிருபர்களிடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது: ஜெயலலிதா நோய் தொற்றுக்காகவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைகள் மூலம், ஜெயலலிதாவுக்கு இருந்த நோய் தொற்று இப்போது முற்றிலுமாக குணமாகியுள்ளது. ஜெயலலிதா, மனதளவிலும், உடல் அளவிலும் திடமாக உள்ளார்.
முதல்வரின் விருப்பத்தின் பேரில்தான், அவர் வேறு வார்டுக்கு மாற்றப்படுவார். அவர் எப்போது வீடு திரும்பினால் நன்றாக இருக்கும் என உணர்கிறாரோ அப்போது வீட்டுக்கு அனுப்பப்படுவார். தற்போது நார்மல் உணவுகளை அவர் சாப்பிட்டு வருகிறார். இவ்வாறு பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications