6 ஆண்டாக கடிதம் மட்டுமே எழுதும் ஜெயலலிதா பிரதமரை சந்திக்க வேண்டும் - ஸ்டாலின்
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக பிரதமரை ஜெயலலிதா சந்திக்க முயற்சி செய்தால் திமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காவிரி பிரச்சினை தொடர்பான 6 ஆண்டாக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் மட்டுமே எழுதி வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து வன்முறையில் இறங்கிய கன்னடர்கள் தமிழர்களை தாக்கினர். தமிழக வாகனங்களையும் அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. ஏராளமான தமிழர்களும் தாக்குதலில் காயமடைந்தனர். இந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை எழும்பூரில் திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. எழும்பூர் ரயில் மறியலில் சென்னை திமுக சட்டசபை உறுப்பினர்கள் உட்பட 5000 பேர் பங்கேற்றனர். அப்போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷமிட்டனர். ரயில் மறியல் நடத்தச் சென்ற போது போலீஸ் தடுத்ததால் ஸ்டாலின் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக பிரதமரை ஜெயலலிதா சந்திக்க முயற்சி செய்தால் திமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காவிரி பிரச்சினை தொடர்பான 6 ஆண்டாக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் மட்டுமே எழுதி வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். திமுக, விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டம் காரணமாகவே முதல்வர் நீதிமன்றம் சென்றதாக ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து ஸ்டாலினையும், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரையும் போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.
திருச்சியில் சாலை மறியல் நடத்திய திமுக செயலர் கே.என்.நேரு தலைமையில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இதே போல வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
-
எனக்கு ஒன்னு.. என் மகனுக்கு ஒன்னு.. வாரிசுகளுக்கு சீட் கேட்கும் திமுக அமைச்சர்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே -
ராஜீவ் காந்தி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த கனிமொழி.. திருச்சி மாநாட்டில் சம்பவம்! ஷாக்கில் உதயநிதி -
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
திமுகவின் அடுத்த அதிரடி.. கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. கையெழுத்தான ஒப்பந்தம்! -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
“ரஜினியை மிரட்ட முடியாது.. யாருக்கும் அடிபணிய மாட்டார்” - தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பதிலடி! -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது! -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications