மத்தியில் காங்கிரஸ் அரசை அகற்றுங்கள்... சிதம்பரத்தில் ஜெயலலிதா
சிதம்பரம்: மத்தியில் காங்கிரஸ் அரசை அகற்றி மக்கள் நல ஆட்சி அமைய வேண்டும் என சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.
வரும் லோக்சபா தேர்தல் நாட்டின் தலைவிதியை மாற்றக்கூடிய தேர்தல் என்ற அவர், தேர்தலில் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து பேசிய அவர், மத்தியில் காங்கிரஸ் அரசை அகற்றி மக்கள் நல ஆட்சியை அமைக்க வேண்டும் என்றார்.
தேர்தலில் குடும்ப ஆட்சிக்கும், ஊழல் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஜெயலலிதா, வரும் மக்களவை தேர்தல் சாதாரணமான தேர்தல் அல்ல என்றும், நாட்டின் தலைவிதியை மாற்றக் கூடிய தேர்தல் என்றும் தெரிவித்தார்.
நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமங்களில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் கட்டணமில்லா கல்வி அளிக்கப்படுகிறது என்றும், அரசின் நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள் என்றும் கூறினார்.
உயர் கல்வியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், உயர் கல்வி, மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று குறிப்பிட்ட ஜெயலலிதா, தமிழகத்தில் ஏராளமான நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும், மாணவர்கள் நலன் கருதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு கையகப்படுத்தியது என்றும் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications