நித்தியானந்தா ஆதரவாளர்களை வெளியேற்ற முடியாது.. தொண்டை மண்டல ஆதீனம்
காஞ்சிபுரம்: நித்தியானந்தா சீடர்கள் இங்குதான் இருப்பார்கள். அவர்கள் இங்கு பூஜை செய்ய எந்தத் தடையும் இல்லை. அவர்களை வெளியேற்ற முடியாது என்று காஞ்சிபுரத்தில் உள்ள தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாசம் திட்டவட்டமாக கூறி விட்டார்.
இந்த ஆதீன மடத்துக்கு ரூ1,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்த மடத்தின் ஆதீனம் ஞானபிரகாசம் திடீரென காணாமல் போனார். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது.

ஏற்கனவே மதுரை ஆதீன மடத்தின் சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தாவின் சீடர்கள்தான் இந்த ஆதீனத்தையும் கடத்தியதாக கடந்த ஞாயிறன்று காஞ்சிபுரம் பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆதீனம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஆதீனம் ஞானபிரகாசம் மடத்துக்கு திரும்பினார். பெங்களூரு பிடதியில் இருந்து ஆதீனம் ஞானபிரகாசம் மடத்துக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆதீனம்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நித்தியானந்தா ஆதரவாளர்களை வெளியேற்ற முடியாது. அவர்கள் மடத்தில் பூஜை செய்ய உரிமை உள்ளது. அவர்களை யாரும் தடை செய்ய முடியாது. இதனால் என்ன வந்தாலும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று ஆதீனம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆதீனத்தின் இந்தப் பேச்சால் காஞ்சிபுரத்தில் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்படித்தான் மதுரை ஆதீனம், நித்தியானந்தா பிடியில் சென்றபோது மதுரையில் பெரும் மோதல் வெடித்தது என்பது நினைவிருக்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications