மரம் வளர்ப்போம்.. மழை பெறுவோம்.. காரைக்குடியில் மாணவர்கள் உலக தண்ணீர் தின பேரணி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தினம் மார்ச் 22 முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணியை காரைக்குடி நகராட்சி ஆணையர் க. ரங்கராஜ் தலைமையேற்று துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜா வரவேற்றார்.
இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆலங்குடியர் வீதி நகராட்சிப்பள்ளி மாணவர்கள், ஆலங்குடியர் வீதி நகராட்சிப்பள்ளி தலைமையாசிரியர் கனகராஜ், காரைக்குடி நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தண்ணீர்ப் பிரச்சினை
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு குறுக்கே நிற்ப்பது தண்ணீர் பிரச்சனை தான். நீரின்றி அமையாது உலகு.... என்பது வள்ளுவன் வாக்கு. அனைத்து உயிர்களும் உயிர் வாழ தண்ணீர் மிக அவசியம்.

தண்ணீர் அவசியம்
மரம், கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், மனிதன் என அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் மிக மிக அவசியம். தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருளாய், தண்ணீர் பாக்கெட், தண்ணீர் பாட்டில், தண்ணீர் கேன் என்று இப்போது பணம் பண்ணும் தொழிலாகிவிட்டது.

பொய்க்கும் பருவ மழை
பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழைநீரை நாம் தேக்கி வைத்து கொள்ள ஏற்பாடும் செய்து கொள்வதில்லை என்பதே உண்மை. மழைக்காலங்களில் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது.

நீர்ப் பாதுகாப்பு அவசியம்
நீரை பாதுகாக்கவும், சுழலின் சமன்பாட்டை நிலைத்திருக்கச்செய்வதும் மக்கள் கையில்தான் உள்ளது. இக்கருத்துக்களை பொது மக்கள் அறியும் வண்ணம் மாணவர்கள், "மரம் வளர்ப்போம், மழை நீரை பெறுவோம்", "நீரை சேமிப்போம், வருங்கால தலைமுறையை பாதுகாப்போம்" என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணி நடத்தப்பட்டது.

கண்ணதாசன் மணிமண்டபத்தில்
இப்பேரணி இராமநாதன் செட்டியார் நகராட்சிப்பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டு, அம்பேத்கர் சிலை, பெரியார் சிலை, நூறடி ரோடு வழியாக கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிறைவடைந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications