கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? 3 கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?
Recommended Video

சென்னை: கர்நாடகாவில் 1985ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும், பதவியில் இருக்கும் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இங்கு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

காற்று மாறுகிறது
1985ம் ஆண்டு ராமகிருஷ்ண ஹெக்டே ஆட்சி காலத்திற்கு பிறகு கர்நாடகாவில், தொடர்ந்து மீண்டும் அதே முதல்வர் தலைமையிலான அரசை மக்கள் தேர்ந்தெடுத்தது கிடையாது. ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டையே ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் எடுத்துள்ளனர். ஆனால், இம்முறை காற்று மாற்றி வீசுகிறது. காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று சி-ஃபோர் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

காங்கிரஸ் வெற்றி
2013ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் அதிகபட்சம் 120 சீட்டுகளை வெல்லும் என இதே அமைப்பு கணித்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் 122 தொகுதிகளை வென்று, தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைத்தது. இம்முறை, காங்கிரஸ் 124 சீட்டுகளை வெல்லும் என இதே அமைப்பு கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது. எனவே மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாற்றை மாற்றியமைக்கலாம் என்ற சந்தோஷத்தில் உள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.

இரு கருத்துக் கணிப்புகள்
ஆனால், மேலும் இரு கருத்துக் கணிப்புகளோ, தொங்கு சட்டசபை அமையும் என கூறுகின்றன. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிதான், எந்த கட்சி ஆட்சியமைக்க வேண்டுமானாலும், கை கொடுக்க வேண்டிய கட்சியாக மாறும் எனவும் அவை கூறுகின்றன. சிஹெச்எஸ் நடத்திய கருத்து கணிப்பில், காங்கிரஸ் 77-81 சீட்டுகளை பிடிக்கும் எனவும், பாஜக 73-76 சீட்டுகளை கைப்பற்றும் எனவும் கணித்துள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் 64-66 தொகுதிகளை கைப்பற்றும் என கூறுகிறது இந்த கருத்துக் கணிப்பு. பலமிழந்துள்ள, ம.ஜ.த கட்சி இவ்வளவு அதிக சீட்டுகளை வெல்ல முடியாது என்பது சாமானியர்களும் பேசிக்கொள்ளும் கணிப்பு. அப்படியிருக்க இந்த அமைப்பு எப்படி இவ்வளவு இடங்களை அக்கட்சிக்கு கொடுத்தது என்பது புரியாத புதிர்.

மதசார்பற்ற ஜனதாதளம் முக்கிய பங்கு
மற்றொரு கருத்துக்கணிப்பை டிவி9 மற்றும் சிவோட்டர் ஆகியவை இணைந்து நடத்தியுள்ளன. இது ஓரளவுக்கு கள நிலவரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த கருத்து கணிப்புபடி, காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்றாலும், அறுதி பெரும்பான்மையை பெற முடியாது. அக்கட்சி 102 சீட்டுகள் வரையிலும், பாஜக 92 சீட்டுகள் வரையிலும், ம.ஜ.த 25 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications