பதவி சுகம் அனுபவித்த பரிதி... முதல் முறையாக கருணாநிதி கருத்து!

பதவி சுகம் அனுபவித்தவர் என்றும் அவர் மறைமுகமாக சுட்டியுள்ளார். இதுகுறித்த கேள்விக்கு அவரது கேள்வி பதில் பாணி அறிக்கை...
கேள்வி: தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்த போது அமைச்சர் பதவியை அனுபவித்த ஒருவர் மீது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 2011இல் போடப்பட்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கை, அவர் தற்போது அ.தி.மு.க. விலே சேர்ந்த நிலையில் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறாரே?
பதில்: எதிர்க்கட்சி என்றால், நடவடிக்கை எடுப்பதும், ஆளுங்கட்சி என்றால் கண்டும் காணாமல் விடப்படுவதையும்தானே கண்டு வருகிறோம். சில மாதங்களுக்கு முன்பு எதிர்க்கட்சியிலே இருந்த ஒருவர் மீது போடப்பட்ட பல அவதூறு வழக்குகள், அவர் ஆளுங்கட்சியிலே சேர்ந்த பிறகு திரும்பப் பெறப்பட்டன.
அதைப்போலவேதான் தற்போதும் நீதிபதி அவர்கள் தன் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் வங்கியில் கடன் வாங்கியதையும், அவருக்கு பரிசாக வந்த பொருள்களையும் விசாரணை அதிகாரி கணக்கிலே கொண்டு வரத் தவறியுள்ளார் என்றும், அவர் மீது போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். காவல் துறையினர் எப்படியெல்லாம் குற்றம்சாட்டி வழக்கு தொடுக்கிறார்கள் என்பதையும் இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பரிதி இளம்வழுதி குறித்து இதுவரை கருணாநிதி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதுவும் பேசியதில்லை. இப்போதுதான் முதல் முறையாக மறைமுகமாக பரிதி குறித்துப் பேசியுள்ளார்.
-
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications