தமிழக சுற்றுலா பயணி மீது கேரள வனத்துறையினர் தாக்குதல்... பாலருவி தற்காலிகமாக மூடல்
கேரள மாநிலத்தில் உள்ள பாலருவி தற்காலிகமாக மூடப்பட்டது.
நெல்லை: தமிழக சுற்றுலா பயணி மீது கேரள வனத்துறையினரும், வனக்குழுவினரும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாலருவி தற்காலிகமாக மூடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில்அமைந்துள்ள குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மிதமான தண்ணீர் வரத்து கொட்டுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்தவண்ணம் உள்ளனர். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த அருவிகளில் குளித்து முடிந்து சுற்றுலாப் பயணிகள் அண்டை மாநிலமான கேரளாவிலுள்ள ஆரியங்காவு பாலருவி நோக்கி கார்,வேன் ,மற்றும் பஸ்களில் குளிக்க சென்று வந்தனர்.
இங்கு குளிப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.40 வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 30-ஆம் தேதி வனத்துறையினருக்கும் தமிழக சுற்றுலா பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கேரளா வனத்துறையினரும்,வனக்குழுவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக சுற்றுலாப் பயணியை தாறுமாறாக அடித்து உதைத்தனர். அங்கு குளிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு கேரளா வனத்துறை,வன பாதுகாப்பு குழுவினர் ஆகியோரின் செயலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவுப்படி பாலருவி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் இந்த அருவியில் உள்ளுறை சார்ந்தவர்களுக்கு பணி வழங்காமல் வெளியூர் நபர்களுக்கு பணி வழங்குவதாகவும், சுற்றுலாப் பயணிகளை தாக்கியதாகவும் வனத்துறையினர் மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து கேரளா வனத்துறை இந்த அருவியை காலவரையின்றி மூட உத்தரவிட்டதைத் தொடர்ந்து அருவி மூடப்பட்டது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications