தமிழச்சிக்கு ஸ்கூட்டர், தமிழனுக்கு குவாட்டர் இதைத் தான் தந்திருக்கிறது அரசு... குஷ்பு விளாசல்!
தமிழகச்சிக்கு ஸ்கூட்டரும் தமிழனுக்கு குவாட்டர் மட்டுமே அரசு தந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
Recommended Video

கரூர் : தமிழச்சிக்கு ஸ்கூட்டரும், தமிழனுக்கு குவாட்டரும் மட்டும் தான் அரசு உறுதியாக தந்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய குஷ்பு, சண்டை போட்டுக் கொண்டு ஒருவர் ஜெயலலிதா சமாதி முன்பு போய் அமர்ந்தார். அவர் ஏதோ செய்யப்போகிறார் தமிழகத்தில் ஏதோ ஒரு மாற்றம் வரும் என்று ஒரு புள்ளி தெரிந்தது, ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக நீ பெரியவனா, நான் பெரியவனா உன் வேஷ்டியை நான் கிழிக்கிறேன் என் வேஷ்டியை நீ கிழித்துப் பார் என்று சண்டைபோட்டவர்கள், திடீரென ராமன் லட்சுமணன் போல பதவியை பங்கிட்டுக் கொண்டு லூட்டி அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு
மக்களுக்கு என்ன நல்லது என்று ஈபிஎஸ், ஓபிஎஸ் நினைக்கவே இல்லை. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்த போது மக்களின் வசதி எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது. எத்தனையோ நல்ல திட்டங்களை இந்த கூட்டணி தந்துள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
வேலைவாய்ப்பு, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு, பெண்களுக்கான பாதுகாப்பு திட்டம் என எத்தனையோ கொண்டு வந்துள்ளோம். தமிழகத்தில் இன்று பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது.

தமிழனுக்கு குவாட்டர்
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர் செய்திருக்கும் ஒரே விஷயம் தமிழச்சிக்கு ஸ்கூட்டர், தமிழனுக்கு குவாட்டர் அது மட்டும் தான் உறுதி. ஸ்கூட்டரும், குவாட்டரும் தர உங்களைத் தேர்ந்தெடுப்பார்களா, முதலில் இவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை, இவங்களே இவங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

குடிகார கணவனை அழைத்து செல்ல
பெண்களுக்கு ஸ்கூட்டர் கொடுப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் முன்னேற்றத்தை காட்டுவதற்கு இல்லை. கணவன்மார்கள் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடக்கிறார்கள், அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல பெண்களுக்கு கஷ்டமாக இருப்பதால் அவர்களை ஸ்கூட்டரில் உட்கார வைத்து அழைத்து செல்வதற்காகவே அரசு ஸ்கூட்டரைத் தருகிறது என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications