நெல்லை அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்.. பீதியில் பொதுமக்கள்
கடையம் சுற்றித்திரியும் சிறுத்தை கூண்டில் சிக்காததால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
தென்காசி: நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள கடனாநதி அணை அடிவாரத்தில் அமைந்துள்ள விவசாய கிராமம் பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட வீடுகளில் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றி, மிளா, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

மலையடிவாரத்தில் உள்ள வயல்கள் மற்றும் தோட்டங்களில் விளைவிக்கப்படும் நெல், வாழை, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்தி செல்கின்றன. மேலும் கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு, மாடு, நாய் வளர்ப்பு விலங்குகளை தூக்கிச் செல்வதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தமிழக - கேரளா எல்லையான புளியரை முதல் அம்பாசமுத்திரம், கடையம் வரை சிறுத்தையின் அட்டகாசத்தால் மக்கள் நிம்மதியை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடையம் பெத்தான்பிள்ளை குடியிருப்பில் மீண்டும் சிறுத்தை தலைகாட்ட தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதையடுத்து வனத்துறையினர் கூண்டு வைப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது பொதுமக்கள், வனத்துறையினரை கூண்டு வைக்க விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கூண்டு வைப்பதை விட சிறுத்தை வருவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் சனிக்கிழை கடையத்தில் சிறுத்தைகள் அட்டகாசம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் தங்களுக்கு வனவிலங்குகளால் உயிருக்கு ஆபத்து ஏற்ப்டுமோ என்று அச்சம் இருப்பதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications