தேர்தல்- லைசன்ஸ் துப்பாக்கிகளை மார்ச் 31க்குள் ஒப்படைக்காவிட்டால் உரிமம் ரத்து
சென்னை: உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர், தங்களது து்ப்பாக்கிகளை மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 5 ஆம் தேதியிலிருந்து தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. அதன்படி, தேர்தல் சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு வழங்க முறைகேடாக உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 5 ஆம் தேதி முதல் நேற்று வரை மட்டும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சென்னையில் உரிய அனுமதி இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 41 லட்சம் பணம், 24 கிலோ தங்க நகைகள் சிக்கியது. இதனை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் அரசு கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, அரசு அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும் என்பது மரபாகும். அதன்படி, துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைத்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்," சென்னை மாநகரில் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், திரைப்பட பிரபலங்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் என 2,750 பேர் அரசு அனுமதியுடன், முறையான உரிமத்துடன் துப்பாக்கியை தங்கள் பாதுகாப்புக்காக வைத்திருக்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதன்படி, இதுவரை 1,183 பேர் தங்கள் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர்.
துப்பாக்கியை ஒப்படைக்காதவர்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் துப்பாக்கி "லைசென்ஸ்" உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி வங்கிகள், செக்யூரிட்டி நிறுவனங்களில் மட்டும் துப்பாக்கியை பயன்படுத்த சில நிபந்தனைகளுடன் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு துப்பாக்கி, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்று அந்த அதிகாரி கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications