அதிமுக மாஜி எம்எல்ஏவின் 2 மனைவிகளுக்கு சிறை... சொத்துக்குவிப்பு வழக்கில் பரபர தீர்ப்பு!
போடி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வத்தின் மனைவியருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் ஓராண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது.
சென்னை : அதிமுக முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வத்தின் மனைவியருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையை ஹைகோர்ட் உறுதி செய்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் 1991- 96 வரையிலான காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் வீ. பன்னீர்செல்வம். இவரது அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ. 21லட்சம் மதிப்புடைய சொத்துகளை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது.

இந்தப் புகாரில் பன்னீர்செல்வம், அவருடைய மனைவி ஜானகி அம்மாள் மற்றும் துணைவி தனபாக்கியத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றம் 2007ம் ஆண்டில் பன்னீர்செல்வத்திற்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அவரின் 2 மனைவிகளுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதனிடையே 2012ம் ஆண்டில் பன்னீர்செல்வம் மரணமடைந்து விட்டார்.
இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பன்னீர்செல்வத்தின் இரண்டு மனைவிகளின் தண்டனையை உறுதி செய்துள்ளது. இதனால் மாஜி எம்எல்ஏ வீ.பன்னீர்செல்வத்தின் மனைவி ஜானகி அம்மாள் துணைவியார் தனபாக்கியம் 2 வாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications