இன்று புனித வெள்ளி: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு–சிலுவை பாதை
சென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு, சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததை நினைவுகூறும் வகையில், கிறிஸ்துவர்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர்.
லெந்து நாட்களின் கடைசி வெள்ளிக் கிழமையை, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து அவர் மரித்த நாளாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. சிலுவை பாதை பவனியும் நடைபெற்றது.
உலகம் எங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு மரித்த நாளை புனித வெள்ளி தினமாக அனுஷ்டிக்கிறார்கள். அவர் இறந்து மூன்றாவது நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார். இதனைதான் ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.

40 நாட்கள் நோன்பு
இந்த விழாவுக்கு தயாராகும் முன்பு அவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாட்களில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயேசுவின் இறப்பை சித்தரிக்கும் சிலுவை பாடு நிகழ்ச்சி ஆலயங்களில் நடைபெறும். அவர் உயிர் நீத்த வெள்ளிக்கிழமையே புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது.

சிலுவைப்பாதை
இன்று உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை அனுஷ்டிக்கிறார்கள். இந்த நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, நற்கருணை வழிபாடு ஆகியவை நடைபெற்றது.
இதில், திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு இயேசுவின் சிலுவை பாதை நிகழ்வுகள் தொடங்கியது.

சிலுவையில் அறைதல்
ஜெருசலேமில் இருந்து இயேசுவை கொல்கதா மலைக்கு அழைத்துச் சென்று அங்கு சிலுவையில் அவரை அறைந்து கொல்லுவதை நினைவூட்டும் வகையில் இந்த வழிபாடு நடக்கும். அதன் பிறகு ஆலயத்தின் பீட துணிகள் அகற்றப்படும்.

தவக்காலம் முடிவு
இன்று முழுவதும் கிறிஸ்தவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் அருந்தி தவம் இருப்பர். இன்று இரவுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிவுக்கு வரும். சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு மேல் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் தொடங்கும். மரித்த இயேசு உயிர்த்தெழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை முன்னிட்டு சிறப்பு பிராத்தனைகளும் நடைபெறும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications