இன்று புனித வெள்ளி: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு–சிலுவை பாதை
சென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு, சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததை நினைவுகூறும் வகையில், கிறிஸ்துவர்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர்.
லெந்து நாட்களின் கடைசி வெள்ளிக் கிழமையை, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து அவர் மரித்த நாளாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. சிலுவை பாதை பவனியும் நடைபெற்றது.
உலகம் எங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு மரித்த நாளை புனித வெள்ளி தினமாக அனுஷ்டிக்கிறார்கள். அவர் இறந்து மூன்றாவது நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார். இதனைதான் ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.

40 நாட்கள் நோன்பு
இந்த விழாவுக்கு தயாராகும் முன்பு அவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாட்களில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயேசுவின் இறப்பை சித்தரிக்கும் சிலுவை பாடு நிகழ்ச்சி ஆலயங்களில் நடைபெறும். அவர் உயிர் நீத்த வெள்ளிக்கிழமையே புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது.

சிலுவைப்பாதை
இன்று உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை அனுஷ்டிக்கிறார்கள். இந்த நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, நற்கருணை வழிபாடு ஆகியவை நடைபெற்றது.
இதில், திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு இயேசுவின் சிலுவை பாதை நிகழ்வுகள் தொடங்கியது.

சிலுவையில் அறைதல்
ஜெருசலேமில் இருந்து இயேசுவை கொல்கதா மலைக்கு அழைத்துச் சென்று அங்கு சிலுவையில் அவரை அறைந்து கொல்லுவதை நினைவூட்டும் வகையில் இந்த வழிபாடு நடக்கும். அதன் பிறகு ஆலயத்தின் பீட துணிகள் அகற்றப்படும்.

தவக்காலம் முடிவு
இன்று முழுவதும் கிறிஸ்தவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் அருந்தி தவம் இருப்பர். இன்று இரவுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிவுக்கு வரும். சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு மேல் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் தொடங்கும். மரித்த இயேசு உயிர்த்தெழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை முன்னிட்டு சிறப்பு பிராத்தனைகளும் நடைபெறும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications